Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்கால் ஸ்டூல்: வித்தியாசமான பரிசா இருக்கும் போல...

Webdunia
புதன், 8 மே 2019 (15:10 IST)
போட்ஸ்வானாவில் பாலூட்டி விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த மூன்று ஆஃப்ரிக்க தலைவர்களுக்கு யானைக்காலால் செய்யப்பட்ட ஸ்டூல் பரிசாக அளிக்கப்பட்டது.
 
நீல நிற துணியால் சுற்றப்பட்ட அந்த பரிசுப்பொருள் போஸ்ட்வானாவின் அதிபர் மோக்வே சிமாசிசேவால், நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
 
இந்த நாடுகள் மற்றும் தென் ஆப்ரிக்கா, யானை தந்தங்களை விற்பதற்கான தடையை நீக்குமாறு கோருகின்றன. வர்த்தகத்தில் வரக்கூடிய பணத்தை விலங்குகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என இந்த நாடுகள் தெரிவிக்கின்றன.
ஆஃப்ரிக்கா முழுவதும் ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 யானைகள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வெறும் 4 லட்சத்தும் 50 ஆயிரம் யானைகளே மிஞ்சியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த யானைக்கால்களால் ஆன ஸ்டூல்கள் பரிசாக வழங்குவதன் மூலம், போட்ஸ்வானா யானை தந்த வர்த்தகத்துக்கு தங்களின் ஆதரவு குறித்து வலுவான ஒரு செய்தியை சொல்கிறது என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments