Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் பள்ளித் தேர்வில் முறைகேடு : மாணவிக்கு சிறை

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (20:12 IST)
பள்ளித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாற்காக பள்ளி மாணவி ஒருவர் இரு வாரம் சிறைக்கு அனுப்பட்டுள்ள சம்பவம் இந்திய மாநிலமான பீகாரில் நடந்துள்ளது.
 

 
அனைத்து பாடங்களிலும் முதல் இடத்தில் வந்த 17 வயதான ரூபி ராய், மறு தேர்வின் போது தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
 
வீடியோ ஒன்றில், அரசியல் அறிவியல் பாடத் திட்டத்துக்கான வார்த்தையை சரியாக எழுத்துக் கூட்ட முடியாமல் திணறிய ரூபி ராய், அது சமையல் தொடர்பான பாடம் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்து, ரூபி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
முதல் தரவரிசையில் இடம்பெற்ற மற்ற மாணவர்களுக்கும் கைது ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேடு காரணமாக, இந்த மாதம் முன்னதாக பீகார் மாநில பள்ளித் தேர்வு வாரியத்தின் தலைவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 
வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற விஷயமாக உயர்நிலை தேர்வுகள் பார்க்கப்படுவதால், இதில் தேர்ச்சி பெற வேண்டிய பெரும் அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகிறார்கள்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.47 கோடி அமெரிக்க டாலர்களை மாணவிகள் கடத்தினார்களா? 2 பேர் கைது..!

ஏற்ற இறக்கமின்றி மந்தமாக வர்த்தமாகும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

குறி வெச்சா இரை விழணும்.. கப்பலை தாக்கும் புதிய ஏவுகணை சோதனை! - இந்தியா சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments