Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் 2019: பிபிசி-யின் வாய்ஸ் ஆக்டிவேட்டட் புல்லட்டின்!!

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (17:58 IST)
பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் 2019 பொதுத் தேர்தல்களில் வாய்ஸ் ஆக்டிவேட்டட் புல்லட்டின் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.


 
 
இந்த புல்லட்டின், சேட் தொழில்நுட்பம் மற்றும் தினசரி உண்மை செய்தி சோதனைகளை போல இதுவும் நடைபெறும். இந்த சிறப்பு திட்டம் பிபிசியின் இந்திய மொழியில் இடம்பெறும். குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய ஆறு மொழிகள். 
 
இந்தியா முழுவதும் உள்ள பிபிசி நியூஸ் பத்திரிகையாளர்கள் ஆறு இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பாரபட்சமின்றி, சுயதீனமான ஆழமான கவரேஜ், சிறப்பு நேர்காணல்கள் மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்யும். 
 
குறிப்பாக தேர்தல், இந்தியாவின் எதிர்கால வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் தேர்தல் மீதான அவர்களின் தொலைநோக்கு பார்வை போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
 
தேர்தல் முழுவதும், பிபிசி வாக்களிக்கும் போக்குகளை மிகவும் கவனமாக கண்காணித்து அனைவரிடமிருந்தும் நுண்ணறிவைக் கொண்டு வருகிறது. விவசாய நெருக்கடி இருந்து சமூக குற்றங்கள் வரை அனைத்தையும் கவனமாக கண்காணிக்கவுள்ளது. 
 
பிபிசி வேர்ல்ட் நியூஸ் மற்றும் பிபிசி.காம் கட்சிகளின் பிரச்சாரத்தையும், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, தேசியவாதம், கிராமப்புற வாக்கெடுப்பு, மதம், இளம் தலைமுறையினரின் வாக்கு  வாக்காளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை உட்பட அனைத்து முக்கிய தலைப்புகளை பற்றியும் கவனம் செலுத்தவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments