Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தின் முதல் அதிபரை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிலிடப்பட்டார்

Webdunia
ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:01 IST)
1975ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜேத் தூக்கிலிடப்பட்டார்.
 
வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த குற்றவாளியான அப்துல் மஜேத், 25 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்து, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வார தொடக்கத்தில் அப்துல் மஜேத்தின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, வங்கதேச தலைநகர் தாகாவில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் தந்தையான க்ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1975ஆம் ஆண்டு ராணுவ சதியால் கொல்லப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அப்போது கொல்லப்பட்டனர்.
 
வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்ற நான்கு ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சதி செயலுக்கு பிறகும் அப்துல் மஜேத், வங்கதேசத்தில்தான் இருந்து வந்தார். ஆனால், 1996ஆம் ஆண்டில் பிரதமராக ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 லட்சம் செலவில் Tower Clock.. கடிகாரம் ஓடல.. சரிசெய்ய வழியும் இல்ல! - கலாய் வாங்கிய பீகார் ஸ்மார்ட்சிட்டி!

ஏப்ரல் 10 முதல் தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து 1680 சிறப்பு பேருந்துகள்..!

இன்றைய பங்குச்சந்தை ரணகளமாகுமா? சீனாவுக்கு 104% வரிவிதித்த டிரம்ப்..!

நீட் தேர்வுக்காக இன்று அனைத்து கட்சி கூட்டம்.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

போய் வாருங்கள் அப்பா.. தந்தை குமரி அனந்தன் மறைவு குறித்து தமிழிசை உருக்கமான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments