Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2015 (10:18 IST)
பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும்.

பின்னர் இந்த செயலி ஃபோனையே செயலற்றுப்போகச் செய்துவிடும். சொல்கிற கணக்கில் ஐநூறு டாலர் பணம் செலுத்தினால்தான் ஃபோன் மறுபடியும் இயக்க முடியும் என்று அச்செயலி எச்சரிக்கும். பணம் செலுத்தாமல் மறுபடியும் ஃபோனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம்.

இப்படியாக மிரட்டிப் பணம் பறிக்கும் செயலிகளை உருவாக்குவது ஒரு லாபகரமான இணையக் குற்றமாக பரவி வருகிறது என இணையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தரவுகளை அழித்துவிடுவோம், வெளியில் பரவவிட்டு விடுவோம் அல்லது ஃபோனை முடங்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிற இப்படியான செயலிகளை 'ரேன்சம்வேர்' என்று அழைக்கின்றனர்.

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

Show comments