Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

Webdunia
சனி, 1 நவம்பர் 2014 (16:11 IST)
மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து, வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர்.


 




வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான போலீஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
 
பாலஸ்தீனர் ஒருவரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக் கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை அந்த பாலஸ்தீனர்தான் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

ஜெருசலேத்தில் அதிகமான பதற்றம் நிலவுவது இது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments