Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம்

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2014 (18:16 IST)
அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் 'உண்ணாவிரத மௌன அறப் போராட்டம்', இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.

 
இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக நடைபெற்று வரும் இந்த ஒருநாள் போராட்டத்தில், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். இதுவரை தமிழ்நாட்டிற்குள் மட்டும் நடைபெற்று வரும் இது போன்ற போராட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்த, அந்தக் கட்சியினர் திட்டமிட்டுள்ளாகக் கூறப்படும் சூழலில் இன்றைய இந்தப் போராட்டம் துவக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அக்கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவர் வேணுகோபால் கூறும் போது, இது ஒரு அறப் போராட்டம் என்றும் அமைதியாக மட்டுமே தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
 
“தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை”
 
அஇஅதிமுக மாநிலங்களைவை உறுப்பினர்களின் தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவரான மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. முக்கிய அலுவல் காரணமாக அவர்கள் டில்லிக்கு வர முடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும் அதனாலேயே அவர்கள் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அக்கட்சியில் மொத்தமுள்ள 47 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 45 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களோடு முன்னாள் மக்களவை உறுப்பினர் முருகேசனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
 
இவர்கள் அனைவரும் கோஷங்கள் எதுவும் எழுப்பாமல் அமைதியாக, காந்தி சிலை முன்பாக அமர்ந்துள்ள போதும், கையில் 'நீதி வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியுள்ளனர்.
 

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments