Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கஸ் ஒப்பந்தம் வட்டார அமைதியைக் கெடுப்பது - சீனா கருத்து

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (23:15 IST)
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று விமர்சித்துள்ளது சீனா.
 
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவும், பிரிட்டனும் ஆஸ்திரேலியாவுக்கு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை முதல் முறையாக வழங்கும்.
 
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி என்று இந்த ஒப்பந்தம் பரவலாகப் பார்க்கப்படுகிறது.
 
இந்த தென் சீனக் கடல் பகுதி நீண்ட காலமாகவே பதற்றத்தை உண்டாக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
 
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்வினையாற்றிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்த ஒப்பந்தம் வட்டார அமைதியை மோசமாகப் பாதிக்கும் என்றும், ஆயுதப் போட்டியைத் தீவிரமாக்கும் என்றும் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments