Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதக் குற்றச்சாட்டு:14 வயது சிறுவனுக்கு 8 மாதங்கள் சிறை

Webdunia
புதன், 27 மே 2015 (11:23 IST)
ஆஸ்திரியாவில் 14 வயது பாடசாலைச் சிறுவன் ஒருவருக்கு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ், குறைந்தது எட்டு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
வியன்னாவின் ரயில் நிலையம் மீது குண்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டார் என, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
 
அந்தச் சிறுவன், அல் கையீதா ஆதரவாளர்கள், மற்றும் இஸ்லாமிய அரசு வலையமைப்புடனும் தொடர்பு வைத்திருந்ததாக அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
அந்த ரயில் நிலையிம் மீதான தாக்குதலை நடத்திய பிறகு, அச்சிறுவன் சிரியாவில் செயல்பட்டுவரும் தீவிரவாதிகளுடன் சேர எண்ணியிருந்தார் எனவும் அரச தரப்பு கூறுகிறது.
 
எட்டு வருடங்களுக்கு முன்னர் துருக்கியிலிருந்து அச்சிறுவன் ஆஸ்திரியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், விளையாட்டாகவே குண்டு தயாரிக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் கூறுகிறார்.
 
தலைநகர் வியன்னாவுக்கு மேற்கேயுள்ள புனித போல்டென் நகரில் வெளியாருக்கு அனுமதியில்லாத வகையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments