Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்தவர்கள் அதிர்ச்சி:அட்டைப் பெட்டிகளில் சிசுக்களின் உடல்கள்

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (12:06 IST)
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வீடொன்றை சோதனையிட்ட காவல்துறையினர் குழந்தை ஒன்றின் சடலத்தையும் மேலும் 6 குழந்தைகளின் உடல் எச்சங்களையும் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தை ஒன்று தொடர்பில் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
 
அப்போது குழந்தை ஒன்றின் சடலத்தை மீட்டெடுத்த விசாரணையாளர்கள், அங்கு காணப்பட்ட அட்டைப் 
பெட்டிகளை சோதனையிட்டபோது அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
 
அந்த அட்டைப் பெட்டிகளில் 6 குழந்தைகளின் உடல் எச்சங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
குழந்தைகளின் தாய் என்று நம்பப்படுகின்ற 39 வயதுப் பெண் ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
 
10- ஆண்டு காலத்தில் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அந்தப் பெண், அவற்றைக் கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்தக் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பதைக் கண்டறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
 
ஒவ்வொரு பெட்டியை திறந்துபார்த்த போதும் அதிர்ச்சடைந்த விசாரணையாளர்கள் மிகவும் மனவருத்தம் அடைந்ததாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments