Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானியப் போர் வன்முறை குறித்து ஷின்ஷோ அபே வருத்தம்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:42 IST)
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய வன்முறை ஆக்ரமிப்பு குறித்து ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
 


அமெரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஷின்ஷோ அபே பேசுகையில், தனது நாடு செய்ததைப் பற்றி கண்டும் காணாமல் அது இருக்க முடியாது என்றார்.
 
போரின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டில், அபேயின் கருத்துக்கள் கவனமாகக் கேட்கப்பட்டன.
 
ஆனால், அவர் இந்தப் போரின்போது கொல்லப்பட்ட அமெரிக்கர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்த போதும், ஜப்பான் ஆசிய மக்களுக்கு வலியைத் தந்தது என்று ஒப்புக்கொண்டபோதும் அவருக்கு பலத்த கைதட்டல் கிடைத்தது.
 
எதிர்காலத்தில் அமைதி மற்றும் சுபிட்சத்தை கொண்டுவர தான் எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் என்று அவர் கூறினார்.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஒருவர் பேசுவது இதுவே முதன்முறை.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments