இந்திய மருத்துவம் பிறப்பு முதல் இறப்பு வரை

Webdunia
கருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்குக் கவலைய ோ, அச்ச உணர்வோ இருக்க கூடாத ு. இவைகளைப் போக்கி மகிழ்ச்சியா ன, எதையும் தாங்கும் சூழ்நிலையில் இருக்க வைக்க வேண்டும். மேலும் 7-வது மாத மருந்துகள் குழந்தையின் நாடித்துடிப்ப ு, உஷ்ணநிலை இருதய வளர்ச்ச ி, மூளை வளர்ச்ச ி, இருதய பலம் ஆகியவற்றைத் தடுகின்றது.

இடையில் உண்டாகும் பிரச்சனைகள்

இன்று சிசுவின் துடிப்ப ை, அசைவை அறிய ஸ்கேன் செய்து பார்க்க வேண்டி உள்ளத ு, அன்று எளிதாக பசு வெண்ணெயை வயிற்றில் தடவ அது உருகிவிடும். அப்போது பிள்ளை உயிருடன் நன்றாக உள்ளத ு, உருகாவிட்டால் சிசு இறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

ஏதோ காரணத்தால் வயிற்றில் சிசு இறந்து விட்டால ், கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது. முக்கியமாக இன்று கர்ப்பப்பையில் உள்ள நீர் முதலில் வெளியேறி விடும ். இது மிகவும் சிக்கலானது. முடிவில் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டி வரும். ஆனால் அன்று இவ்வளவு வசதியும ், வளர்ச்சியும் இல்லை. இதற்கு முன்னோர்கள் எளிமையாக மருந்து கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர். பிரண்டை வேரையும ், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தட வ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பில ை, வேப்ப இல ை, முருங்கை கீர ை, கடுக்காய் ஒன்ற ு, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிற ு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள ், பக்க விளைவுகள் இல்லாதத ு, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை.

இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்க ி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும்.

இதுவரை குழந்தை உண்டாக ி, பிறக்கும் வரை அன்றும ், இன்றும் பார்த்தோம ். இனி பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை வரும் நோய்களைப் பற்றி பார்ப்போம். இன்று எத்தனையோ மருத்துவ கருவிகள ், எலக்ட்ரானிக் நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் துணையோடு குழந்தை பிறந்து குழந்தைக்கு (30 நாட்களுக்குள்) கழுத்து வீங்க ி, முழங்கால ், முழங்கை குளிர்ந்தால ், அக்குழந்தை விடாமல் அழும். காரணம் வயிற்றில் வலி உண்டு என்று அர்த்தமாகும். குழந்தைக்கு தேவையான உடல் உஷ்ணம் இல்லை என்று அர்த்தமாகும். இதற்கு உடனே உஷ்ணம் ஏறவும் வயிற்றுவலி தீரும் மருந்து பயன்படுத்த வேண்டும்.

குணங்கள் :

செங்கிரந்தி : பிள்ளை பிறந்தவுடன் தொண்டை கட்டி பூனைகுரல் போல் அபம ், மலம ், ஜலம் போகாது , வயிறு ஊதும். க ை, கால் சிவப்பாக மாறும்.

தருங்கிறந்தி :

குழந்தை அவ்வப்போது அலறியழும ், முலைப்பாலுண்ணாது வயிறு ஊதும். கீழ் உதடு கருப்பாக மாறும்.

கிரந்து : மல சிக்கல ், வயிறு நொந்த ு, விடாமல் அழும். மலம் கடுமையான வலியுடன் வெளியே போகிற மாதிரி போக்கு காட்டி போகாது. இதனால் சிறுநீர் கட்டும ், விக்கல் எடுக்கும ், குடித்த பாலை உடனே வாந்தி பண்ணும். 18 வகையான வயிறு வலிகளும் வரும்.

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தால் இந்த நோய்தான் என்று கண்டறிகின்றனர். வாய் பேசும் குழந்தைகள் தங்களுக்கு வலிகள் உள்ளதை மட்டும ், எங்கு வலிக்கின்றது என்று சொல்கின்றது. ஆனால் வாய் பேசாத குழந்தைகள் எப்படி சொல்லும் இதற்கு அன்று முன்னோர்கள் முனிவர்கள் ரிஷிகள ், சித்தர்கள் ஞானிகள் குறிகளை சொல்லியுள்ளனர். அவற்றிற்கு தனித்தனியாகவும் மொத்தமாகவும் மருந்துகளை கூறியுள்ளனர். இனி வரும் நோய்களை பார்ப்போம்.

நோய் வரும் காரணம்

கிரந்த ி, செங்கிரந்த ி, கருங்கிரந்த ி, தோஷம ், மாந்தம ், கணம் பிரள ி, கரப்பான ், செவ்வாப்ப ு, தொண்டை கட்ட ு, அக்கரம ், வைசூர ி, சள ி, ஜலதோஷம் இன்னம் பல நோய்கள் வருகின்றன.

மாந்தம ், முலைப்பாலாலும ், கணம ், கர்ப்ப மூட்டினாலும ், மற்ற பினிகள ், தாய் தந்தை புணர்ச்சியினால் எழும் ஞசட்டினாலும் கிரிமிகளாலும் உண்டாகின்றது.

மாந்தம் (மந்தம்)

எருமைபால ், நெய ், தக்காளி பழம ், தேங்காய ், இளநீர ், கடல ை, வெல்லம ், சர்க்கர ை, புளித்த மோர ், தயிர் மாங்கனிகள ், மலைத்துவர ை, உளுந்து மொச்ச ை, பச்சைபட்டான ி, உருள ை, வாளை மீண ், கொண்ட ை, சாகல ், கரை வாயு பண்டங்கள் இவைகளை அதிகமாக சாப்பிட்டால ், வாத மாந்தம் பித்த மாந்தம ், சிலேஷ்ம மாந்தம ், போர் மாந்தம ், வாலைமாந்தம ், சுரமாந்தம ், நீர் மாந்தம ், சொரி மாந்தம ், கட்டு மாந்தம ், எரிமாந்தம ், தலை மாந்தம ், கண் மாந்தம ், வலிப்பு மாந்தம ், சுழி மாந்தம ், மூக்கு மாந்தம ், சன்னி மாந்தம ், ஊது மாந்தம ், வீக்கமாந்தம் என 20 வகையான மாந்தங்கள் (மந்தம்) குழந்தைகளுக்கு நேரிடும்.

மாந்த குணங்கள் :

குழந்தை உடல் சூடேறி வியர்க்கும். முலைபாலுண்ணாது வாந்தி பண்ணி மயங்கும ், சீதமும ், மலமுமாய் கழியும ், அல்லது கெட்டபால் போலும் தெளிந்த நீர் போலும் கழியும ், வயிறு பொருமும் , கொட்டாவி விடும். மூக்கில் புண் உண்டாகும ், வலிப்பு மூச்சை (மயக்கம்) ஏற்படும். உடல் மந்தமாகி வியர்த்து குளிரும ், நெஞ்சில் கபங்கட்டும ், உடல் திடீரென்று ஊதும ், வயிறு இரைந்து கழியும ், கடுப்பு கழிச்சல ், தொண்டை வல ி, சுரம் ஏற்படும ், தலைவல ி, முகம் மிணு மிணுக்கும ், மலம் சிறுத்து நீர் கருத்து இறங்கும். மார்பு புடைக்க ு, நெற்றி நரம்பு புடைக்கும். தாகம் ஏற்படும ், வயிறு ஊதி புளித்த நாற்றமாய் கழியும ், வாந்தி பண்ணி பரிதவிக்கும் மாவ ு, கரைத்தாற் போல் கழியும். ஏப்பம் , கொட்டாவி விடும ், நாசியில் நீர் வடியும ், உடலை முறுக்கி கொட்டாவி விடும ், தூங்காது சில சமயம் முக்கி முக்கி சீதமும ், மலமுமாய் கழியும் உடல் மெலிந்து கொண்டே வரும் கடைசியில் வலிப்பில் வந்து நிற்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

Show comments