Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்தத்திற்கு பணிந்த ஜெலன்ஸ்கி! ரஷ்யாவின் ரியாக்‌ஷன் என்ன? - இன்று அமெரிக்கா பேச்சுவார்த்தை!

Prasanth Karthick
புதன், 12 மார்ச் 2025 (09:50 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடங்கிய போர் மூன்றாண்டுகளை கடந்து விட்ட நிலையில், தற்போது அமெரிக்காவின் அதிபராகியுள்ள டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

முன்னதாக அமெரிக்காவில் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படாத நிலையில், உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவிகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

அதை தொடர்ந்து இன்று ரஷ்யாவுடன் அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் மீண்டும் உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷட்டில் பேட்மிண்டன் விளையாடும்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு: 25 வயது ஐடி ஊழியர் மரணம்!

நிமிஷா பிரியா விடுதலைக்காக ஏமன் பயணம் செய்யும் 13 வயது மகள்..உலுக்கும் சோகம்!

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments