Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை மாதிரி யாரும் ஆகிடாதீங்க: டீக்கடை நடத்தி ரூ.5 கோடி சம்பாதித்த இளைஞரின் அறிவுரை!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:41 IST)
என்னை மாதிரி யாரும் ஆகிடாதீங்க: டீக்கடை நடத்தி ரூ.5 கோடி சம்பாதித்த இளைஞரின் அறிவுரை!
ஆஸ்திரேலியாவில் டீக்கடை வைத்து ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக சம்பாதித்த இளைஞர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆஸ்திரேலியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிபிஏ படிக்க சென்றிருந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்
 
அதன் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் டிராப் அவுட் சாய்வாலா என்ற பெயரில் டீக்கடையை தொடங்கினார். இந்த டீக்கடை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து பல கிளைகள் தொடங்கிய அவர் தற்போது 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் டீக்கடை வைத்து 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்தாலும் என்னை  முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் யாரும் படிப்பை விட்டு விட வேண்டாம் என்றும் படிப்புதான் ஒருவருக்கு மிகப்பெரிய சொத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments