Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு பாறைகளுக்கு நடுவே சிக்கிய இளைஞன் ! என்ன நடந்தது தெரியுமா ?

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (14:27 IST)
தென்கிழக்கு ஆசியாவில்  உள்ளது கம்போடியாவின் நாம்பென் நகரம். இங்கு வவ்வால்களின் கழிவு உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வரும் சம்போரா  என்ற இளைஞர் வவ்வால்களின் கழிவை சேகரிப்பதற்காக அங்குள்ள  குகைப் பகுதிக்குச் சென்றார்.
இந்நிலையில் இரு பாறைகளுக்கு இடையே உள்ள சிறு இடைவெளியில், வவ்வால்களின் கழிவுகள் இருந்துள்ளன. அதை எடுப்பதற்க்காக  சிரமத்தைப் பொருட்படுத்தாமல் அவர் அந்த பாறை இடுக்கில் சென்றுள்ளார்.
 
பின்னர்  அவரால் திரும்ப வெளியே வரமுடியவில்லை. அதனால் 3 நாட்களாக  அந்தப் பாறை இடுக்கிலேயே அவர் உயிரைக் கையில் பிடித்துவைத்து இருந்துள்ளார்.
 
இதையடுத்து வவ்வாளின் கழிவை தேடிச்சென்ற  சம்போராவை காணவில்லை என அவரது உறவினர்கள் அப்பகுதிக்கு  வந்த போது, அவர் பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சம்போராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments