Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணன், தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து சண்டை ஏற்படுத்திய பெண்

அண்ணன், தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து சண்டை ஏற்படுத்திய பெண்
, சனி, 13 ஜூன் 2015 (15:45 IST)
இளம்பெண் ஒருவர் அண்ணன், தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுக்கிடையில் பெரும் சண்டையை ஏற்படுத்தியுள்ளார்.
 
இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவருக்கும், கைதடிப் பகுதியைச் சேர்ந்த டிப்பர் டிரைவராகப் பணி புரியும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. வன்னிப் பகுதியின் பல இடங்களுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றியுள்ளார். இதை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பார்த்துள்ளனர்.
 
இதற்கிடையில் அந்த இளைஞர், தனது மூத்த அண்ணனின் திருமணம் முடிவடைந்த பின்னர் அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக தெரிவித்துள்ளனார். இதனையடுத்து அண்ணனின் தொலைபேசி எண்ணை காதலனிடம் இருந்து எவ்வாறோ பெற்ற யுவதி, காதலனின் அண்ணனைத் தொடர்பு கொண்டு அவனிடம் காதல் வார்த்தைகள் பேசியுள்ளார்.
 
இதனால் அவர் யாரென்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளார். அதன் பின்னர் குறித்த அந்தப் பெண் அவருக்கு தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும் அந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொண்ட அண்ணன், பல நாட்களின் பின்னர் வேறு ஒரு எண்ணில் இருந்து அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
 
அப்போது தன்னைப் பற்றிப் புகழ்ந்தும், தனக்கு சொந்தமாக ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றது எனவும், தான் இ்ன்னும் சில நாட்களில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் அந்த பெண்ணிடம் பேசியுள்ளார். வேறு ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வரவும், அந்தப் பெண்ணிற்கு இது தனது காதலனின் அண்ணன் என்று தெரியவில்லை.
 
அதேபோல அவருக்கும் தான் பேசுவது தனது தம்பியின் காதலி என்று தெரியாது. காதலனின் அண்ணனுடன் ஏற்பட்ட தொலைபேசித் தொடர்பிற்கு பின்னர், ஒருநாள் அங்குள்ள ஒரு கோவில் உற்சவத்தின் போது, அங்கு தனது காதலனின் அண்ணன் எனத் தெரியாமலேயே அவரைச் சந்தித்து பேசியுள்ளார்.
 
அதன் பின்னர் தனது காதலனின் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள அந்தப் பெண் முயன்றுள்ளார். இதனால், ஏன் காதலி தனது காதலை மறுக்கிறாள் என்று காதலன் தீவிர புலனாய்வு மேற்கொண்டுள்ளார். அப்போதுதான், தனது அண்ணனின் காதல் விஷயம் தம்பிக்கு தெரியவந்துள்ளது.
 
இதனையடுத்து கடும் போதையில் வீட்டுக்குச் சென்ற தம்பி, அண்ணனை கடுமையாகத் தாக்கியதுடன் கோடரி எடுத்து வெட்டுவதற்கு துரத்தியுள்ளான். தனது தம்பி எதற்காகத் தாக்குகின்றான் எனத் தெரியாது அண்ணனும் தப்பி ஓடியுள்ளான். இதன் பின்னர் குடும்பத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரின் குட்டும் வெளிவந்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil