Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமன் ராணுவ முகாமில் பாய்ந்த ஏவுகணை: 60 பேர் பலி!

Webdunia
ஞாயிறு, 19 ஜனவரி 2020 (10:17 IST)
ஏமன் ராணுவ முகாம்கள் மீது ஏவுகணைகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு ஏமனில் உள்ள மாரீப் மாகாணத்தில் அல்-மிலா பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு பாயும் ஏவுகணை ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஏமனுக்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்ளவில்லை. இதனால் தாக்குதல் நடத்தியது யார் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க சவுதி அரேபியா அவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் சவுதியின் ஏவுகணை தவறுதலாக ஏமன் ராணுவ முகாமை தாக்கியிருக்குமோ என பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments