Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமக்குன்னு இன்னொரு பூமி இல்ல! – ட்ரெண்டாகும் உலக பூமி தினம்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (13:08 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையிலும் “உலக பூமி தினம்” இன்று சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புவி வெப்பமயமாதம், மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களை அழித்தல் போன்ற பல சீர்கேடுகளையும் மக்கள் உணர்ந்து கொள்ளவும், பூமியை அதன் சூழலை தொடர்ந்து காப்பதற்காகவும் உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ல் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டாலும் இந்த நாள் உண்மையாக பூமியை மதிக்கும் விதமாக அமைந்துள்ளது. எந்த வித போக்குவரத்து நெரிசல்கள், வாகன புகைகள், தொழிற்சாலை கழிவுகள் என எதுவுமின்றி உண்மையான பூமி நாளாக அமைந்துள்ளது.

மான்களும், ஒட்டகங்களும் ஆளற்ற கடற்கரைகளை சுற்றி வர, பல ஆண்டுகளாக சூழலியல் ஆர்வலர்கள் அழிந்துவிட்டதாக கருதிய விலங்குகளும் கூட சாவகாசமாய் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. திட்டங்கள் போட்டு, நிதி ஒதுக்கியும் கூட சுத்தம் செய்ய முடியாத ஆறுகளை சில நாட்கள் ஊரடங்கு தூய்மைப்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதும் காற்றில் கார்பன் மாசு குறைந்துள்ளதாக ஆய்வகங்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
நமக்கென வாழ்வதற்கு இரண்டாவதாக ஒரு உலகமும் கிடையாது, இரண்டாம் கட்ட திட்டங்களும் கிடையாது என்பதை மக்கள் உணர வேண்டும். தன்னை தானே சுத்தம் செய்து கொண்டுள்ள இந்த பூமியை மீண்டும் மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் இந்த நாளில் உறுதியேற்க சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments