Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மாதங்களுக்கு முன் கடலில் மாயமான பெண் உயிருடன் மீட்பு!

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (15:08 IST)
இந்தோனேசியாவின் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது ராட்சத அலை ஒன்று அவரை கடலுக்குள் இழுத்துச்சென்றது. 
 
அப்போது இவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. பல நாட்கள் தேடியும் இவர் கிடைக்காத காரணத்தால் இவர் இறந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், இந்த பெண் 18 மாதங்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 
 
அதாவது, அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். 
 
முதலில் இதை கண்டுக்கொள்ளாமல் விட்ட இவரது தந்தை இதே போன்று கனவு மீண்டும் மீண்டும் வரவும், குறிப்பிட்ட இடத்திற்கு போய் தேடியுள்ளார். அப்போது அந்த பெண் முன்னர் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். 
 
ஆனால், 18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாகவே இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதலா? 4 பேர் படுகாயம்..!

திருநங்கைகள் பெண்கள் கிடையாது! அவர்களுக்கு சலுகையும் கிடையாது! - அங்கீகாரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்.. முதல்வருக்கு தமிழிசை கோரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments