முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 அன்று தன் காதலனை முட்டாளாக்க எண்ணிய காதலிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மற்றவர்களை முட்டாளாக்குவதற்காக விதவிதமாக மூளையை கசக்கி ஏமாற்ற முயற்சி செய்வது உண்டு. அது சிலநேரம் நமக்கே ஆபத்தாக முடிவடைந்துவிடுவதும் உண்டு. அப்படி ஒரு சுவராஸ்யமான சம்பவம் இங்கிலாந்து காதல் ஜோடிக்கு நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஹேலிக் மெக்பே என்பவர் தன் காதலனை ஏமாற்றுவதற்காக வாட்ஸ் அப்பில் "உன்னுடன் இருக்க எனக்கு விருப்பமில்லை" என்றும், அடுத்ததாக “நான் சந்தோஷமாக இல்லை” என்றும் அனுப்பியுள்ளார்.
இதற்கு உடனே அவரது காதலர் "கடவுளுக்கு நன்றி.. நீயே முதலில் சொன்னதற்கு" என்று பதில் அனுப்பியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மெக்பே ‘என்னது.. இதற்கு என்ன அர்த்தம்’ என்று அனுப்பியுள்ளார். பதிலுக்கு அவர், “நீ முதலில் இதை சென்னதால், எனக்கு சொல்லும் அவசியமில்லாமல் போய்விட்டது” என்று அனுப்பியுள்ளார்.
அவர் அழுகாத குறையாக, “அப்படியானால் என்னுடன் இருக்க உனக்கு விருப்பமில்லையா?” என்று கேட்டுள்ளார். பின்னர் காதலர் ’நீ என்னை ஏப்ரல் ஃபூல் ஆக்குவது தெரிந்துதான் நான் அவ்வாறு செய்தேன்’ எனக்கூற இருவரும் சமாதானம் ஆகியுள்ளனர். அப்பாடா என அந்த பெண்ணும் பெருமூச்சு விட்டுள்ளார்.