தன்னுடைய பீரை குடித்ததால் ஆத்திரம் : கணவனை கொலை செய்த மனைவி
பீரைக் குடித்த கணவனை கொலை செய்த மனைவி
பொதுவாக மது அருந்தும் பழக்கம் எல்லா நாட்டு மக்களுக்கும் இருக்கிறது. அதிலும் மேலை நாடுகளில் ஆண், பெண் என இருவரும் சேர்ந்து மது அருந்துவார்கள்.
அப்படி மது அருந்தும் பழக்கம் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. பென்சில்வேனியாவில் வசிக்கும் தம்பதி கடந்த ஞாயிறு அன்று இரவு ஒன்றாய் மது அருந்தியுள்ளார்கள். தனக்கு மிகவும் பிடித்தமான பீரை அருந்திய மனைவி கொஞ்சம் அதில் மிச்சம் வைத்து விட்டு உறங்கிவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையிலிருந்து எழுந்த அவர், நேராக மிச்சம் வைத்திருந்த பீரை குடிக்க ஆவலுடன் சென்று தேடியுள்ளார். ஆனால் அந்த பீரை அவரது கணவர் இரவே குடித்துவிட்டு தூங்கப்போய்விட்டார் என்பது அவருக்கு தெரியவந்தது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர், அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த கணவரை சராமாரியாக குத்தியுள்ளார். அதில் தலை, கழுத்து என பலத்த காயமடைந்த அவரின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த குற்றம் காரணமாக ட்ரேசி லீ(45) என்ற அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.