Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனை கொலை செய்ய சொட்டு மருந்து பயன்படுத்திய மனைவிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (20:13 IST)
கணவனை கொலை செய்ய சொட்டு மருந்தைப் பயன்படுத்திய மனைவி ஒருவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன் என்பவரின் மனைவி தனது கணவர் கொடுமைப்படுத்தியதால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து கண்ணுக்கு போடும் சொட்டு மருந்தை குடி தண்ணீரில் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்
 
ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சொட்டு மருந்தை குடி தண்ணீரில் கலந்தால் வயிற்றுப்போக்கு மட்டுமே ஏற்படும் என தான் நினைத்ததாகவும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இருப்பினும் அவர் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சொட்டு மருந்தின் மூலம் மனைவியே கணவரை கொலை செய்தது பிரேத பரிசோதனை மூலம் மட்டுமே தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments