Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்ல சொல்ல கேட்காம திறந்து விடுறீங்க! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:47 IST)
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தளர்வுகள் அளித்து வருவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக பல நாடுகள் கடுமையான ஊரடங்கை பின்பற்றி வந்தன. இந்நிலையில் பொருளாதாரரீதியாக நாடுகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தற்போது பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.’

இவ்வாறாக தளர்வுகளை செய்து வருவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் சகஜ நிலைக்கு திரும்புவது பேரழிவை ஏற்படுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments