Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னபடி செய்தால் இந்த ஆண்டே கொரோனாவுக்கு முடிவு! – உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (08:42 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் தங்கள் வியூகபடி உலக நாடுகள் செயல்பட்டால் இந்த ஆண்டே கொரோனா முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க உலக நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வந்தாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளால் பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு முடிவுக்கட்டுவது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது. நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments