Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் சொன்னா மட்டும் போதாது; ஆதாரம் வேணும்! – உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (13:05 IST)
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப் ஆதாரத்தை அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இந்நிலையில் சீனாவின் தவறான தகவல்களே உலகம் முழுவதும் கொரோனா பரவ காரணம் என்றும், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அதிபர் ட்ரம்ப் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய ட்ரம்ப் சீனா  கொரோனா விவகாரத்தில் தவறு செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அதை வெளியிடுவதாகவும் பேசியுள்ளார். சீனா மீதான ட்ரம்ப்பின் இந்த தொடர் குற்றச்சாட்டு உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், இதுவரை சீனாவுக்கு எதிரான ஆதாரங்கள் எதையும் அமெரிக்க அதிபர் தங்களிடம் அளிக்கவில்லை என்றும், ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments