’என்ன கொடுமை சார் இது’ - பீர் குடிக்கும் வேலைக்கு ரூ.43 லட்சம் சம்பளம்
’என்ன கொடுமை சார் இது’ - பீர் குடிக்கும் வேலைக்கு ரூ.43 லட்சம் சம்பளம்
பீர் குடிக்கும் வேலைக்கு ரூ.43 லட்சம் சம்பளம் என்று அறிவித்த சில நொடிகளில் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள அந்நாட்டின் தேசிய அருங்காட்சியகம் சமீபத்தில் வேலைக்கான ஒரு பணியிடத்தை அறிவித்துள்ளது. அதில், அமெரிக்கா என்றவொரு தனிநாடு உருவாவதற்கு முன்னதாகவே இப்பகுதியில் காலகாலமாக தொன்றுதொட்டு இருந்துவரும் பீர் தயாரிப்பு மற்றும் உணவுப் பழக்க,வழக்கங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இங்குள்ள மதுபான ஆலைகளில் தயாராகும் பலவகை பீர்வகைகளை ருசிபார்த்து, இதுதொடர்பாக ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க மூன்றாண்டு குத்தகை அடிப்படையில் வேலைக்கு ஆள் தேவை. இந்த வேலைக்கு ஆண்டு சம்பளமாக 64,650 டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 43 லட்சம் ரூபாய்) அளிக்கப்படும்” என்று தேசிய அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த வேலைக்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர், இதனால், அந்த இணையதளத்தின் சர்வர் ‘கிராஷ்’ ஆகிப்போனதாகவும் தெரியவந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிவரை இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என்பதால் இன்னும் உள்ள ஒருமாத காலத்துக்குள் மேலும் பல லட்சம் விண்ணப்பங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.