Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழும் குழந்தைக்கு பொம்மையைக் காட்டி சமாதானம் செய்த நாய் - வீடியோ

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (16:23 IST)
தொட்டிலில் விளையாடிய குழந்தையிடம் இருந்து பொம்மையை எடுத்துச் சென்ற நாய், குழந்தையின் அழுகையை நிறுத்த அனைத்து பொம்மைகளையும் கொண்டு வந்து சமாதானப்படுத்தும் வீடியோ இணையத்தில் பிரபலமாகியுள்ளது. 
 
இங்கிலாந்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தொட்டிலில் படுத்தபடி அதன்மேல் கட்டப்பட்டிருந்த பொம்மையை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. அங்கு வந்த நாய் பொம்மையை எடுத்துச் சென்றது. இதனால் அழத் துவங்கிய குழந்தையை சமாதானம் செய்யும் பொருட்டு 'சார்லி' என்னும் அந்த நாய் அனைத்து பொம்மைகளையும் கொண்டு வந்து சமாதானப்படுத்தும் வீடியோ யூ டியூப் இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளது. 
 
தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையின் முகம் மறையும் அளவிற்கு பொம்மைகளைக் கொண்டு வரும் சார்லியின் செய்கை மக்களைக் கவர்ந்துள்ளது. 

நன்றி -  You tube  

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments