Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய எரிமலை; பலர் பலி; குழந்தைகள் மாயம்! – காங்கோவில் சோகம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (10:57 IST)
காங்கோ நாட்டில் கடந்த வார இறுதியில் எரிமலை வெடித்த விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் 170க்கும் அதிகமான குழந்தைகளை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கோ நாட்டில் நையிராகாங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததில் 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. இந்த கோர விபத்தில் 2.கி.மீ தொலைவிற்கு சாலையில் எரிமலை குழம்பு பரவியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்புக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ள நிலையில் பெரியவர்கள் 40 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 170 குழந்தைகள் வரை காணாமல் போயிருக்க கூடும் என ஐ.நா குழந்தைகள் அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments