Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய எரிமலை; பலர் பலி; குழந்தைகள் மாயம்! – காங்கோவில் சோகம்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (10:57 IST)
காங்கோ நாட்டில் கடந்த வார இறுதியில் எரிமலை வெடித்த விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் 170க்கும் அதிகமான குழந்தைகளை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கோ நாட்டில் நையிராகாங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததில் 3 கிராமங்கள் அடியோடு அழிந்தன. இந்த கோர விபத்தில் 2.கி.மீ தொலைவிற்கு சாலையில் எரிமலை குழம்பு பரவியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடிப்புக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ள நிலையில் பெரியவர்கள் 40 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 170 குழந்தைகள் வரை காணாமல் போயிருக்க கூடும் என ஐ.நா குழந்தைகள் அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments