விஜயகாந்த்-ன் இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்-இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (20:14 IST)
தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும், தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
 

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

''தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். மக்களுக்காக தன்னை முழுமையான அர்ப்பணித்த மனிதர் விஜயகாந்த்.

எவருக்கும் அஞ்சாது, மக்களுக்காக உடனுக்குடன் சேவையைச் செய்யும் அரசியல் தலைவர். இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர், இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.

பாமக மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments