Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு திருடியதாக 7 வயது சிறுவனை உயிருடன் தீயிட்டு கொன்ற கொடூர கும்பல்- வைரலாகும் பகீர் வீடியோ

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (12:11 IST)
நைஜீரிய கடைகளில் உணவு திருடியதாக சிறுவன் ஒருவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நைஜீரியா  லாகோஸ் பகுதியில் உள்ள கடைகளில் சிறுவன் ஒருவன் உணவு திருடியதாக பிடிபட்டான். அவனை பிடித்த அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் அவனது கை, கால்களை கட்டி வைக்கிறது. அவன் மீது கொடூரமாக தாக்குகிறது அந்த கும்பல். பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறான். ஆனாலும் மனம் இளகாத அந்த அரக்க கும்பல் சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றப்பட்ட டயரை போட்டி அதில் தீ வைத்தன. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவனுக்கு 8 வயதிற்குள் இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்த சிலர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments