ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

Prasanth Karthick
செவ்வாய், 7 ஜனவரி 2025 (16:40 IST)

இந்த புதிய ஆண்டில் பூமிக்கு இணையாக ஒரே நேர்கோட்டில் நான்கு கிரகங்கள் தென்படும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.

 

 

சூரிய குடும்பத்தில் பூமியை போலவே மேலும் பல கோள்களும், சிறுக்கோள்களும், விண்மீன்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் பூமியை விட நீளமான அல்லது குறைவான சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருகையில் மிக அரிதாக அவ்வப்போது சில கோள்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்வதுண்டு.

 

அதன்படி, இந்த ஆண்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் பூமியின் நேர்கோட்டில் ஒன்றாக காணப்படும் வானியல் அதிசயம் நிகழ உள்ளது. இந்த வானியல் நிகழ்வு வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதிகாலை நேரத்தில் இந்த கிரக அணிவகுப்பை காணமுடியும் என்றும், தொலைநோக்கிகள் துணை கொண்டு மேலும் தெளிவாக இதை காணலாம் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments