Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலையில் தீ விபத்து- 68 பேர் பலி

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (15:25 IST)
வெனிசுலா நாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கலவரத்தினால் ஏற்பட்ட தீ விபத்தால் 68 பேர் பலியாகியுள்ளனர்.

 
 
இன்று அதிகாலை வெனிசுலா நாட்டில் உள்ள வாலன்சியா சிறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சிறையில் கைதிகள் அதிகளவில் உள்ளனர். நேற்று சிறை கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது இதனால் சிறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறைக்கு தீ வைத்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
 
ஆனால், தீ வேகமாக சிறைக்குள் பரவியதால் அனைத்து கைதிகளும் சிறையில் சிக்கிக் கொண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கைதிகளின் உறவினர்கள் சிறையின் முன் போராட்டம் நடத்தினர். அதனால் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி களைத்தனர். 
 
இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக சிறை அதிகாரி வில்லியம் சாப் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தீ விபத்தில் 68 பேர் பலியாகியுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரனை நடத்த கூழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments