Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க கம்பெனியை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கும் வெனிசுலா

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (19:30 IST)
அமெரிக்க கிம்பர்லி கிளார்க் நிறுவனத்தின் தொழிற்சாலையை அரசே ஏற்றுக் கொண்டுள்ள வெனிசுலா அரசு, அந்த தொழிற்சாலையை தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
 

 
வெனிசுலாவில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவால் வெனிசுலாவின் வருமானம் குறைந்தது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் உற்பத்தி மற்றும் வினியோகத்தை மேம்படுத்துவது மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவது ஆகிய நடவடிக்கைகளுக்கான புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதன் ஒருபகுதியாகவே, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான கிம்பர்லி கிளார்க்கின் தொழிற் சாலையை அரசே எடுத்துக்கொண்டு விட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்தத் தொழிற்சாலை, அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளது.
 
இதுபோன்ற பல்வேறு தொழிற்சாலைகளை அரசே எடுத்துக் கொள்வது புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். உணவு மற்றும் மருந்துகளின் வினியோகத்தை முறைப்படுத்தி, பற்றாக்குறையிலிருந்து வெளியில் வருவதற்குத் தேவையான பணிகளை ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ முடுக்கி விட்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழிங்க பார்ப்போம்… திமுகவினருக்கு எச். ராஜா சவால்…!

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

அடுத்த கட்டுரையில்
Show comments