அடிக்கும் தொலைவில்தான் அமெரிக்கா இருக்கிறது – ஈரான் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (11:22 IST)
ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக நாடுகள் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்தாலும் ஒருவரை ஒருவர் அடிக்கடி எச்சரித்து அறிக்கைகளை பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அதற்கு பிறகி ஈரான் மீது பல வித தடைகளை ஏற்படுத்தி நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி “ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க ராணுவம் இருக்கிறது” என அமெரிக்காவை எச்சரித்துள்ளார். ஒருவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்தால் ஒரு பீப்பாய் எண்ணெயை 100 டாலர்களுக்கும் மேல் உயர்த்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இந்த மோதல் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மற்ற நாடுகள் கவலைக் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளின் வேதனை உங்க சாதனையா? அவங்க சாபம் சும்மா விடாது! - திமுகவை விமர்சித்த அன்புமணி!

இன்று மாலை, இரவில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

குஜராத் கடல் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா எச்சரிக்கையை மீறி அட்டகாசம்!

மாற்றமின்றி விற்பனையாகி வரும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

இன்றே புயலாக வலுவடையும் மோன்தா! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments