பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (06:43 IST)
உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியபோது காணொளி வாயிலாக நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் அந்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments