Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (06:43 IST)
உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஏப்ரல் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் உலக சுற்றுச்சூழல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியபோது காணொளி வாயிலாக நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை வகிக்க உள்ளார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் அந்த அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடி காணொளி வாயிலாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments