Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் பைடன் ராணுவ வீரர்களுடன் செல்ஃபி...

Webdunia
வியாழன், 18 மே 2023 (21:57 IST)
ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ராணுவ வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

ஜப்பான் நாட்டில் பியூமோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், ஜி-20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகருக்கு இன்று சென்றடைந்தார் என்று வெள்ளை மாளிகையில் வரும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா சென்ற அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்கள், வீராங்கனைகளுடன் ஜோ பைடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும், இப்பயணத்தில், உக்ரைனுடனான ரஷியாவின் போர், அணு ஆயுதம் பயன்பாட்டைக் குறைப்பது, ஏஐ என்ற செயற்கை தொழில் நுட்பம், பருவ நிலை மாற்றம், பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றை ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments