Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்புக்கு விஷ கடிதம் அனுப்பிய பெண் கைது! – அமெரிக்காவில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (13:40 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு வெள்ளை மாளிகை முகவரியில் ரைசின் என்ற விஷம் தடவப்பட்ட கடிதம் வந்துள்ளது. வழக்கமான சோதனையின்போது கடிதத்தில் விஷம் தடவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணையை தீவிரப்படுத்திய உளவுத்துறை கனடாவை சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளது. அந்த பெண் எதற்காக விஷம் தடவிய கடிதத்தை அனுப்பினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு கனடா பெண் விஷ கடிதம் அனுப்பியதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments