Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்கு தடுப்பூசி கொடுங்கள்; அமெரிக்க அதிபரிடம் இந்திய வம்சாவளி எம்.பி கோரிக்கை!

Webdunia
வியாழன், 20 மே 2021 (09:59 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி வழங்கி உதவுமாறு அமெரிக்க அதிபரிடம் இந்தியா வம்சாவளி எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2.50 கோடியை தாண்டியுள்ளது. தினசரி பாதிப்புகள் சில நாட்கள் முன்னதாக 4 லட்சத்தை தொட்டது. இந்நிலையில் பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு 6 கோடி தடுப்பூசிகள் வழங்கி உதவி செய்ய வேண்டும் என இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க அதிபர் ஜோ பிடனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் தரப்பில் வாக்குறுதி தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக அமெரிக்கா உலக நாடுகளுக்கு 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகள் வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments