Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது; பாகிஸ்தான் முன்னாள் அதிபர் குற்றச்சாட்டு

Webdunia
சனி, 26 மே 2018 (18:44 IST)
பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார்.

 
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டு சேர்ந்துள்ளது. 
 
ஆப்கானிஸ்தானில் இந்தியாவில் பங்கு என்ன என்பதை ஐக்கிய நாடுகளின் சபையில் விவாதிக்க இருக்கிறோம். எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பின்னர் மீண்டும் எதற்காக அமெரிக்கா தேடி வருகிறது என்பதற்கான காரணம் பாகிஸ்தான் மக்களுக்கு விளங்கவில்லை. 
 
தேவைப்படும் போது எங்களை பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுவதையும் பாகிஸ்தானியர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments