Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்படையினர் டிக்டாக் பயன்படுத்த தடை! – உஷாரான அமெரிக்கா

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (09:19 IST)
அமெரிக்க கடற்படை வீரர்கள் டிக்டாக் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் ஃபேஸ்புக்கிற்கு பிறகு அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது டிக்டாக் செயலி. அமெரிக்க கடற்படையில் உள்ள வீரர்களும் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவை மையமாக கொண்ட டிக்டாக் செயலி பாதுகாப்பற்றது என்று அமெரிக்கா கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க கடற்படை வீரர்கள் டிக்டாக் பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படலாம் என எச்சரிக்கையடைந்த அமெரிக்க அரசு கடற்படை வீரர்களுக்கு அளித்துள்ள செல்போன்களில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம் என தடை விதித்துள்ளது. முன்னதாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments