Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெக்ஸாஸை முடக்கிய பனிப்புயல்; பேரிடர் மாகாணமாக அறிவித்த ஜோ பிடன்!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (11:23 IST)
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருவதால் அதை பேரிடர் மாகாணமாக அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமாக டெக்ஸாஸில் பனிப்பொழிவு வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்புயல் வீசியதால் வீடுகள், வாகனங்கள் பனியால் மூடியுள்ளன. இதனால் மின்சார சப்ளை முடங்கிய நிலையில் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

தண்ணீர் உறைந்து போயிருப்பதால் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார நிறுத்தத்தால் ஹீட்டர்கள் வேலை செய்யாத நிலையில் மக்கள் பலர் குளிரில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தை பேரிடர் மாகாணமாக அறிவித்த அதிபர் ஜோ பிடன் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், காப்பீடு பெற்று தரவும், காப்பீடு இல்லாதவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments