Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேலும் தடுப்பூசியை தாமதித்தால்…? – ஐ.நா வெளியிட்ட எச்சரிக்கை!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (11:35 IST)
உலகம் முழுவதும் கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை தாமதப்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என ஐ.நா எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பல தடுப்பூசிகளை கண்டறித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

ஆனாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகள் வேறு சில நாடுகளிலிருந்து பரவுவதால் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் 75 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என ஐ.நா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா குறித்து பேசிய ஐ.நா பொதுசெயலாளர் குட்டரெஸ், உலக நாடுகளில் பல மற்ற ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்காமல் இருக்கும்பட்சத்தில் அந்நாடுகளிலிருந்து வெவ்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசியை பகிர்ந்தளிப்பது மேலும் தாமதப்படுத்தப்பட்டால் கொரோனாவின் வெவ்வேறு பரவல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், உலகம் முழுவதும் தடுப்பூசி பரவலாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments