Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயசுக்கு வரும் முன்னரே திருமணம்: என்னடா கொடுமை இது...

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (10:16 IST)
யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் 15 வயதுக்கு முன்னதாகவே குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
 
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த ஆய்வினை யூனிசெப் நிறுவனம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் சுமார் 115 மில்லியன் சிறுவர்களுக்கு சட்டப்பூர்வமாக திருமண வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் நடத்தப்படுவதாக தெரிகிறது. 
 
82 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 15 வயதிற்குள்ளாக ஐந்தில் இரு சிறுவன் திருமணம் செய்துக்கொள்கிறான் என தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமின்றி சிறுமிகளுக்கும் இதே நிலைதான். 
 
அதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் பலருக்கு வயதுக்கு வரும் முன்னரே திருமணம் நடைபெற்றுவிடுகிறது என்பதுதான். ஆப்ரிக்க நாடுகளில் 28%, நிகராகுவாவில் 19%, மடகாஸ்கரில் 13% என சிறு வயது திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்