Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத கொடுமையில் ஆப்கன் குழந்தைள்! – யுனிசெஃப் அமைப்பு வேதனை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (13:20 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள குழந்தைகள் வரலாறு காணாத இடர்பாடுகளை சந்திக்க உள்ளதாக யுனிசெஃப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பல உள்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். அதேசமயம் ஆப்கானிஸ்தானிற்குள் தண்ணீர் தட்டுப்பாடு போன்றவையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஆப்கன் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பான யுனிசெஃப் ”கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் குழந்தைகள் பலர் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமான சுற்றுசூழலை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது தாலிபான்கள் தலையீடால் போலியோ, டெட்டானஸ் மற்றும் பல நோய்களுக்கான மருந்துகளை குழந்தைகளுக்கு கிடைக்க செய்தல் உள்ளிட்டவற்றிலும் சிக்கல் எழுந்துள்ளதாகவும், வரலாறு காணாத சிரமங்களை ஆப்கன் குழந்தைகள் சந்தித்துள்ளதாகவும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments