Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.பாதுகாப்பு படையின் வளையத்தில் வைகோ

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (22:56 IST)
ஐநாவின் மனித உரிமைக்குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள ஜெனீவா சென்றிருந்த வைகோவை சிங்களர் கும்பல் ஒன்று தாக்க முயற்சித்ததாக வந்த தகவலை அடுத்து ஐநாவில் பணிபுரியும் தமிழரான ஒரு அதிகாரி, வைகோ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வரை அவரது பாதுகாப்பிற்காக சிறப்பு கமாண்டர் படை ஒன்றை நியமித்துள்ளார்.



 
 
இந்த சிறப்பு கமாண்டர் படையினர் வைகோவுக்கு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவரை யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாத்து வருகின்றனர்.
 
இந்த பாதுகாப்பு குறித்து வைகோ கூறியபோது, எந்த ஒரு பாதுகாப்பையும் நம்புபவன் நான் இல்லை. ஒரே ஒரு புல்லட்டை எவ்வளவு பெரிய பாதுகாப்பு இருந்தாலும் ஒருவரை கொல்ல சுட்டுவிட முடியும். எனவே பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. இருந்தும் ஐநா தமிழ் அதிகாரி திருப்திக்காக இந்த பாதுகாப்பை ஏற்றுள்ளேன். எனக்கு எந்த விதத்திலும் மிரட்டல் வந்தாலும் நான் பேச வேண்டிய கருத்துக்களில் இருந்து பின்வாங்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments