Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் அரை நிர்வாணத்துடன் போராடிய பெண் கைது: எச்சரிக்கை செய்த ஐநா..!

Mahendran
திங்கள், 4 நவம்பர் 2024 (10:10 IST)
ஈரான் நாட்டில் அரை நிர்வாணத்துடன் போராடிய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஐநா சபை ஈரான் நாட்டை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவர் திடீரென உள்ளாடை மட்டுமே அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

இதனை அடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் ஹிஜாப் கட்டுப்பாடு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த பெண்ணை கைது செய்ததற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தை கண்காணிப்பது மட்டுமின்றி உரிய விசாரணை நடத்தி அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணுக்கு ஐநா சபை உள்பட பல அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஈரான் நாட்டிற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments