Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய வீரர்களுக்கே ஏன் என்று தெரியவில்லை… உக்ரைன் அதிபர் கருத்து!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (17:02 IST)
உக்ரைன் நாட்டில் படையெடுத்துள்ள ரஷ்ய படைகளை சில இடங்களில் உக்ரைன் பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8  வது நாளாகப் போர் நடந்து வருகிறது. இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இந்நிலையில்,  ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர்  உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா நேற்று குற்றம் சாட்டியது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் சமீபத்தில் பேசியதில் ‘ரஷ்ய படைகள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியவில்லை.  உக்ரைன் மக்கள் ராணுவத்தோடு இணைந்து ரஷ்ய வீரர்களுக்கு எதிராக போரிடுகிறார்கள். மக்களின் வீரத்தைப் பார்த்து பல இடங்களில் ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாக செய்திகள் வருகின்றன. சில பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் மக்கள் ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டதற்கு ‘எங்களுக்கு தெரியாது’ என்று கூறியுள்ளனர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்!

கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments