Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை - செலன்ஸ்கி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (17:36 IST)
இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8  வது நாளாகப் போர் நடந்து வருகிறது. இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் அவை தோல்வி அடைந்தன.
 
இந்நிலையில்,  ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்  உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா குற்றம் சாட்டியது.
 
இதனிடையே உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் பாதுகாப்பு படைகள் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய படைகள்  உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 
பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமிட்டிருப்பதன் மூலம், ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் யுக்ரேன் வெற்றிப் பெற்றுள்ளது என்று தெரிகிறது. எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments