Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் என் குடும்பமும்தான் ரஷ்யாவின் முதல் இலக்கு… உக்ரைன் அதிபர் பேச்சு!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (09:34 IST)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் 3 நாட்களைக் கடந்து இப்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘ரஷ்யாவின் முதல் இலக்கு நானும் என் குடும்பமும்தான். அவர்கள் எங்களை கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். எங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை. உலக நாடுகள் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments