நானும் என் குடும்பமும்தான் ரஷ்யாவின் முதல் இலக்கு… உக்ரைன் அதிபர் பேச்சு!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (09:34 IST)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 3 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது. சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் 3 நாட்களைக் கடந்து இப்போது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யாவின் இந்த படையெடுப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்த்துள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘ரஷ்யாவின் முதல் இலக்கு நானும் என் குடும்பமும்தான். அவர்கள் எங்களை கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். எங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை. உலக நாடுகள் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments