Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசியாவிடம் கறுப்புப் பெட்டியை ஒப்படைத்த உக்ரைன் போராளிகள்

மலேசியாவிடம் கறுப்புப் பெட்டியை ஒப்படைத்த உக்ரைன் போராளிகள்
, செவ்வாய், 22 ஜூலை 2014 (13:46 IST)
உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் விமானத்தின் கறுப்புப் பெட்டியை, மலேசிய நிபுணர்களிடம் கிழக்கு உக்ரைன் பகுதியில் தன்னாட்சி கோரி போராடிவரும் போராளிகள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றால், விமானத்தின் கறுப்புப் பெட்டி மிகவும் அவசியமான ஒன்று.

இந்நிலையில் போராளிகள் கறுப்புப் பெட்டியை மலேசிய நிபுணர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். உக்ரைனில் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.

பலியானவர்களின் உடல்களைக் போராளிகள் மீட்டு வருகிற்னர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய விமானத்தை போராளிகள் சுட்டு வீழ்த்தவில்லை என்பதைத் அவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil